• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலி செய்தியை அடையாளம் காண வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்

June 9, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதே வாட்ஸ் செயலியில் தான் நாள்தோறும் ஏதேனும் ஒரு போலி செய்தி அல்லது விளம்பரங்கள் பரப்பி வருகின்றன.

இந்த பிரச்னையை சமாளிக்க வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய வசதியால், மற்றொரு நபரின் தகவல்களை நாம் பகிரும்போது அதில் ‘Forwarded’ எனும் அடையாளம் குறிப்பிடப்படும். இது தகவலை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் தெரியும் வகையில் இடம்பெறும். இதற்கு வாட்ஸ் அப் 2.18.179 என்ற வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும்
இந்த அப்டேட் மூலம் குறிப்பிட்ட ஒரு தகவல் பலரால் பகிரப்படுகிறது என்பதை அடையாளம் காண உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயனீட்டாளர்கள் செய்திகளை உண்மை தன்மை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

‘குட் மார்னிங்’ போன்ற தகவல்களை அதிகம் பகிர்வதால் எந்த பிரச்னையும் ஏற்பட போவதில்லை. ஆனால், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் போலியான தகவல்கள் பெரும்பாலான மக்களை சென்றடைவதை இது கட்டுப்படுத்தும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க