June 4, 2018 தண்டோரா குழு
தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால்,நானும் சமூக விரோதிதான் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது அவரது சொந்த கருத்து.அங்கு போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் சமூகவிரோதிகள் என்றால்,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அனைவரும் சமூக விரோதிகள் தான் என்றும்,நானும் சமூகவிரோதி தான் என்று கூறினார்.மேலும்,போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்,நிறுத்தவும் கூடாது எனக் கூறினார்.