• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

May 4, 2018 தண்டோரா குழு

போரூர் பாலத்தில் இருந்து தவறி எரிக்குள் விழுத்த தந்தை மகனை காப்பாற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சென்னை பூந்தமல்லி அம்மன் நகரை சேர்ந்தவர் ஜெமினி, அவரது மனைவி ஜெயந்தி மற்றும் பத்து வயது மகன் அசோக்குடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள போரூர் பாலத்தின் மேலே அவர்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி ஏரிக்குள் மூவரும் விழுந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருத்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி வெங்கடேசன் அவர்கள் விழுந்ததை பார்த்ததும் சற்றும் யோசிக்காமல் ஏரிக்குள் குதித்து அவர்களை காப்பாற்றினார்.பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மேல் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஏரிக்குள் விழுந்த தந்தை மகனை இருவரையும் காப்பாற்றிய போக்குவரத்து காவலர் வெங்கடேசனுக்கு பொதுமக்கள் பாராடுக்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க