March 18, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் சி.பி.சி.ஐ.டி. காவல் நிறைவடைந்த நிலையில், அவர் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவை மாவட்ட போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். இவரை இன்றுடன் நான்கு நாட்கள் வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
வெள்ளிக்கிழமை மாலை இவரை போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்று மாலை வரை நேரம் இருக்கும் நிலையில், காலையிலேயே அவசரம் அவசரமாக நீதிபதி குடியிருப்பில் நீதிபதி நாகராஜ் முன் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.