• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பொள்ளாச்சி விவகாரம் – கோவை அரசு கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

March 15, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு தொடர்பாக உரிய விசாரணை கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இவ்வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தொடர்பு உள்ளிட்டவை குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டணை வழங்க வேண்டுமென மாணவிகள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட அரசுகலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க