• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சியில் கள்ளச் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 மதுபாட்டில்கள் பறிமுதல்

March 20, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே கள்ளச் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகுமார் தலைமையிலான பறக்கும் படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு உள்ள ஆவின் பாலகம் அருகில் அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்களை வைத்து ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்ததைக் கண்டு அவரை அதிரடிப்படையினர் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த 130 மது பாட்டில்கள் மற்றும் 7780 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த அறந்தாங்கியைச் சேர்ந்த சத்யா என்பவரை கைது செய்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் சோதனைச் சாவடியில் தாலூகா காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அப்போது கேரளாவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும் பேருந்தில் பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை ராஜா என்பவர் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது கேரளாவிலிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. பின்னர் அவரிடம் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி பறிமுதல் செய்த போலீசார் ராஜாவை கைது செய்தனர்.

மேலும் படிக்க