• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை விரைவில் தடுக்க முடியும் – இ.எஸ்.ஐ டீன் பேட்டி

October 19, 2020 தண்டோரா குழு

பண்டிகை காலம் என்பதால் மக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நெருக்கமாக கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சமூக இடைவெளியை பின்பற்றி முகவசங்களை மக்கள் கட்டாயம் அணிய வேண்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தன்னார்வலர்களும் அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை இந்தியன் பவுண்டேசன் சார்பாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக பணி புரியும் வகையில் இலவச கையுறைகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் இந்தியன் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் விஷ்ணு பிரபு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலாவிடம் வழங்கினார்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் நிர்மலா,

தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நெருக்கமாக கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சமூக இடைவெளியை பின்பற்றி முகவசங்களை மக்கள் கட்டாயம் அணிந்து குழந்தைகள் சிறுவர்கள் போன்றவர்களை கடை வீதிக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை விரைவில் தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் யங் இந்தியன் பவுண்டேசன் தாளாளர் கார்த்திகேயன் நிர்வாக உறுப்பினர்கள் வெங்கட்,பிலிப் பிரபு,மற்றும் மெட்ராத்தி ஜமீன் விஜயகுமார்,கட்டபொம்மன் ஜமீன்தார் சீனி கந்தசாமி,கலைமான் கள்ளிமடை காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க