• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்களிடம் கனிவாக பேசவேண்டும் – நகர்நல மைய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மேயர் அறிவுரை

May 16, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 7.77 கிலோ மீட்டர் தொலைவிற்கு 60 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் கோவைப்புதூர், இடையர்பாளையம் மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார மையம் கட்டுமானப்பணிகள் ஆகியவற்றை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தெற்கு மண்டலம் வார்டு எண் 92 மற்றும் 93க்குட்பட்ட மணிகண்டன் நகர் பகுதியில் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில் 6.27 கிலோ மீட்டர் தொலைவிற்கு 45 இடங்களிலும், வார்டு எண் 95க்குட்பட்ட திருமறை நகர் பகுதியில் ரூ.74.80 கோடி மதிப்பீட்டில் 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு 15 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமானதாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வார்டு எண் 90க்குட்பட்ட கோவைப்புதூர், வார்டு எண் 92க்குட்பட்ட இடையர்பாளையம், வார்டு எண் 95க்குட்பட்ட போத்தனூர் ஆகிய இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்நல மையம் கட்டுமானப்பணியினை மேயர் பார்வையிட்டார். தொடர்ந்து 95வது வார்டு போத்தனூர் நகர்நல மையத்திற்கு சென்று ஆய்வு செய்து, சிகிச்சைக்கு வந்த நபர்களிடம் குறைக்களை கேட்டறிந்தார். பொதுமக்களிடம் கனிவாக பேசவேண்டும், தரமான சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள் இளஞ்சேகரன், அப்துல் காதர், பாபு, ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க