• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொங்கல் பண்டிகை: பொள்ளாச்சி, பழநி வழித்தடத்தில் கோவை – திண்டுக்கல் சிறப்பு ரயில்

January 12, 2023 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை – திண்டுக்கல் இடையே பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை,பழநி வழித்தடத்தில் ஜனவரி 13 முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கோவையில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தினமும் காலை 9.20 மணிக்கு புறப்படும் கோவை } } திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்( எண்: 06077) அன்று பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல்லைச் சென்றடையும். இதேபோல், திண்டுக்கல்லில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் திண்டுக்கல் -கோவை முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்( எண்: 06078) அன்று மாலை 5.30 மணிக்கு கோவையைச் சென்றடையும். இந்த ரயிலானது, கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கோவை – திண்டுக்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு ரயில் பயணிகள் தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க