• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அற்புதம்மாள் மனு

July 29, 2019 தண்டோரா குழு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அற்புதம்மாள் மனு அளித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை, விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு கடந்த செம்டம்பர் மாதத்தில் பரிந்துரை செய்தது. ஆனால், 10 மாதங்களாகியும் இது தொடர்பாக ஆளுநர் இது எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்தநிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விசிக எம்.பி.க்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது 7 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள்,

விடுதலைக்காக 28 ஆண்டுகள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என நம்புகிறேன். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தனர், உள்துறை அமைச்சரை சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வந்தேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க