• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் அற்புதம்மாள் கோரிக்கை

September 19, 2017 தண்டோரா குழு

பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அவரது தயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் , கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை ஞானசேகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.

இதனையடுத்து, பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க, தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், பரோல் காலம் முடிய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தைச் சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க