• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபால் சிறையில் அடைப்பு

September 28, 2019 தண்டோரா குழு

பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில் கைதான அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ(23) . இவர் கடந்த 12ம் தேதி தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததனர்.சுபஸ்ரீ உயிர் இழப்புக்கு காரணமான அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஜெயகோபாலை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். பள்ளிக்கரணை போலீசாரும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஜெயகோபால் தலைமறைவானார்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடத்தில் இருக்கும் தனியார்விடுதியை சுற்றிவளைத்து ஜெயகோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இன்று அவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பேனர் வைத்தது தவறுதான் என்பதை ஜெயகோபால் ஒப்புக்கொண்டார். இதையடுத்து வருகிற அக்டோபர் 11-ந்தேதி வரை 14 நாட்கள் அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அக்டோபர் 11-ந் தேதி ஜெயகோபால் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுபோல் பேனர் கட்டியதாக கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் படிக்க