• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“பேட்டி கொடுக்கும் நடிகர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் பணம் கொடுக்க வேண்டும்” – நடிகர் சங்கத்தினர் முடிவு

April 21, 2018 தண்டோரா குழு

பேட்டி கொடுக்கும் நடிகர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் பணம் கொடுக்க வேண்டும் என சென்னையில் தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்களின் சம்பளத்தில் வெளிப்படைத்தன்மை உள்பட படத்தயாரிப்பில் செலவுகளைக் குறைப்பது குறித்து நடிகர் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் சங்கத்தின் தலைவர் நாசர்,பொதுச் செயலாளர் விஷால்,பொருளாளர் கார்த்தி,நடிகர்கள் சிம்பு,அரவிந்த்சாமி,சுகாசினி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாசர்,

படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.மேலும், பேட்டி கொடுக்கும் நடிகர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் பணம் கொடுக்க வேண்டும் என சென்னையில் தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க