• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெல்ஜிய நாட்டு இளவரசி துப்பாக்கியால் சுட்டதில் கேட்கும் திறனை இழந்த பிரதமர்

May 31, 2017 தண்டோரா குழு

பெல்ஜிய நாட்டில் விளையாட்டு போட்டியை துவக்கிவைக்க அந்நாட்டு இளவரசி துப்பாகியால்சுடும் போது அவர் அருகில் நின்றிருந்த பிரதமருர் கேட்கும் திறனை இழந்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்சில் 2௦ கிலோமீட்டர் மராத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(மே 28) நடைபெற்றது. இந்த மராத்தான் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அந்நாட்டின் மன்னர் பிலிப்பின் இளைய சகோதரி ஆஸ்ட்ரிட் மற்றும் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

அப்போது விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக, இளவரசி ஆஸ்டிரிட் துப்பாகியால் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளி வந்த சத்தத்தால், அவர் அருகில் நின்றிருந்த பிரதமர் மைக்கேல் தனது கேட்கும் திறனை இழந்துள்ளார்.

இது குறித்து செய்தி தொடர்பாளர் ஃப்ரெடெரிக் க்யூட்லியர் கூறுகையில்,

“தேசிய முதலீடு திட்டம் குறித்து, அவர் செவ்வாய்க்கிழமை(ஜூன் 6) பாராளுமன்றத்தில் பேசவிருந்தார். ஆனால், இந்த விபத்தால் ஏற்பட்ட செவி திறன் பிரச்னையால், இந்த கூட்டத்தில் பேசுவதை தள்ளி வைத்துள்ளார். இதற்கான உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைந்து, தனது பணியை தொடங்குவார்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க