September 17, 2020
தண்டோரா குழு
பெரியார், அம்பேத்கரின் எல்லா கருத்துக்களையும் பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
பெரியாரும், அம்பேத்கரும் தவிர்க்கமுடியாத தலைவர்கள் என்றாலும் எல்லாவித கருத்துக்களையும் பாஜகவால் ஏற்றுக்கொள்ளமுடியாது.கூட்டணியில் கொள்கை ரீதியாக முரண்பாடு இருக்கும். இரு மொழி கொள்கை தான் அதிமுகவின் நிலைப்பாடு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக்கு அண்ணாமலை
பதிலளித்தார்.
மேலும்,மும்மொழி கொள்கையை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர். ஹிந்தி எதிர்ப்பு விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர்.நீட் விவகாரம், மாணவர்களின் தற்கொலை போன்றவை தேர்வுக்கு முன் நீட் குறித்து தவறான பிம்பம் ஏற்படுத்தப்பட்டதே காரணம்.நீட் தேர்வின் வினாத்தாள்களும் தமிழக பாடத்திட்டத்தை அதிகம் ஒட்டியே உள்ளது. நடிகர் சூர்யா இந்த முறை நீட் தேர்வு குறித்து பேசியது புரிதல் இல்லாமல் போல் இருந்தது என்றார்.