• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் கத்தியை எடுத்து செல்ல அனுமதி

January 7, 2017 தண்டோரா குழு

புது தில்லில் உள்ள மெட்ரோ ரயில்களில் பெண்கள் கத்தியை எடுத்துச் செல்ல மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (CISF) அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

தற்போது புது தில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. புது தில்லி மெட்ரோ ரயில்நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை ஈடுபடுகிறது. பெண்கள் ஆபத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ரயில்களில் கத்தியை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படைஅதிகாரி கூறியதாவது:

“பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதால், தில்லி மெட்ரோ ரயில்களில் நான்கு அங்குலத்திற்கு குறைவான நீளமுள்ள கத்திகளைப் பெண்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளோம். சிறிய கத்திகளால் பாதுகாப்பு அபாயம் இல்லை. மாறாக பெண்களுக்குப் பாதுகாப்புத் தரும் அதை அனுமதித்துள்ளோம்.

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சிஐஎஸ்எப் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னரே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கான முடிவு கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது. இதைப் போல், பாதுகாப்பு காரணமாக தீப்பெட்டி, சிகரெட் லைட்டர் ஆகியவை மெட்ரோ ரயில்களில் அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய கருவிகளை எடுத்துச் செல்லும்போது, அது குறித்த விவரத்தைப் பயணிகள் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க