• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூருவில் தமிழக முதல்வர் பதவி விலகக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

May 26, 2018

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகக்கோரி பெங்களூருவில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதற்கிடையில் இந்த துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை தற்காப்புக்காக தான் நடத்தப்பட்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.இதை கண்டித்து துப்பாக்கிச் சூட்டுக்கு முதல்வர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில்,துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமி பதவிவிலக வேண்டும் என்றும்,தேசிய மனித உரிமை ஆணையம் தீவிர விசாரணை நடத்தி உண்மை அறிய வேண்டும் எனவும் பெங்களூருவில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க