• Download mobile app
11 Jun 2025, WednesdayEdition - 3409
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பூ மார்க்கெட் வளாகத்தின் உள்ள பழைய கட்டிடங்களை இடிக்க முயன்ற அதிகாரிகள் – வியாபாரிகள் தர்ணா போராட்டம்

January 12, 2021 தண்டோரா குழு

கோவை பூ மார்க்கெட் வளாகத்தின் உள்ள பழைய கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க முற்பட்டதால் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி இல்லாத காரணத்தினால் பூ மார்க்கெட்டை தற்காலிகமாக புரூக் பீல்டு சாலையில் உள்ள மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை திடீரென இடிக்க முற்பட்டதால் வியாபாரிகள் அந்த பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கட்டிடத்திற்கும், வியாபாரிகளுக்கு உத்திரவாதம் கொடுத்த பின்பு இடிக்க வேண்டும் என தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில்,

தற்போது மழை அதிகம் பெய்து வருவதால் தற்காலிக மார்க்கெட் சேரும் சகதியுமாக உள்ளதாகவும், இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தற்போது அனைத்து பகுதியிலும் தளர்வு அளிக்கப்பட்டு வந்தாலும் இந்த பூ மார்க்கெட் செயல்பாட்டுக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என தெரிவித்தனர்.இந்நிலையில் இப்போது பழைய கட்டிடத்தையும் இடித்தால் பூ வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி விடும் என வேதனை தெரிவித்தனர். பூ வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பூ வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க