• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புளூவேல் விளையாட்டு மேலும் ஒரு மாணவர் தற்கொலை

September 1, 2017 தண்டோரா குழு

புளூவேல் விளையாட்டால் புதுச்சேரியில் ஒருவர் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புளுவேல் விளையாட்டால் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வோர் என்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் புளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் எம்பிஏ முதலாமாண்டு பயின்று வருபவர் சசிகுமார். இவர் புளூவேல் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முன்னதாக மதுரை திருமங்கலம் அருகே புளூவேல் விளையாட்டால் நேற்று ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க