February 19, 2019 தண்டோரா குழு
வேதாந்தா குழுமத்தின் சார்பாக புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ருபாய் 10 லட்சம் நிதியுதவி வழகப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலை படை தாக்குதலில், இந்திய வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனையேடுத்து தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு
தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகிக்கும் வேதாந்தா குழுமத்தின் சார்பாக புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், பலியான வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.