• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி

December 5, 2018 தண்டோரா குழு

சென்னையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு அரசு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தவர் ஜெயராமன். கொடுத்த பணியை சிறப்பாகச் செய்ததால், ஜெயராமனாக இருந்த அவருக்கு ‘நெல்’ ஜெயராமன் என பெயர் சூட்டினார் நம்மாழ்வார். இதற்கிடையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நெல் ஜெயராமன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்காக அடுத்த சில வாரங்களுக்கு மட்டும் ரூ.15 லட்சத்துக்கு மேல் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல் ஜெயராமனுக்கு அரசு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளது. இதனை ஜெயராமன் குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் வழங்கினர். இதையடுத்து, நலிவுற்ற வேளாண் விஞ்ஞானிகளை தமிழக அரசு ஊக்குவிக்கும்; வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை அரசு ஏற்பது பற்றி முதல்வருக்கு தெரிவிப்போம் அமைச்சர் காமராஜ் கூறினார்.

இதற்கிடையில், நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவின. அதனை நம்ப வேண்டாம் என ஜெயராமன் சகோதரரின் மகன் ராஜு கூறியுள்ளார். மேலும், அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நெல் ஜெயராமன் தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து ஜெயராமனுக்கு நிதி உதவி வழங்கிய அரசுக்கு ராஜு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க