• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனேவில் நடைபெறுமா ஐபிஎல் போட்டிகள் தொடரும் சிக்கல்!

April 18, 2018 தண்டோரா குழு

புனேவில் நடைபெறும் சென்னை அணியின் போட்டிகளுக்கு பாவனா அணையில் நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் தடைவித்துள்ளது.

சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல்.போட்டிகள் மாகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில் கோடை காலம் என்பதால் மாநிலம் முழுவதும் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மைதானத்தை பராமரிக்க எங்கிருந்து தண்ணீா் கொண்டுவரப்படும் என்று மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.இதற்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஐ.பி.எல். போட்டிகளின் போது மைதான பராமரிப்பிற்கு பாவனா அணையில் இருந்து நீரை கொண்டு வந்து பராமரிக்கப்படவுள்ளது.இதற்கு மாநில அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.எனவே திட்டமிட்டபடி புனேவில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், புனேவில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பாவனா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை மைதான பராமரிப்புக்கு அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் புனேவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க