• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புத்தாண்டு பரிசாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுப்பு அளிக்கும் கொல்கத்தா நிறுவனம் !

December 31, 2018 தண்டோரா குழு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் சம்பளத்துடன் ஒவ்வொரு மாதமும் விடுப்பு அளிக்கப்படும் என கொல்கத்தாவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கிறது.

FlyMyBiz என்னும் டிஜிட்டல் மீடியா நிறுவனம் புத்தாண்டு பரிசாக மாதம் ஒரு நாள் இந்த விடுப்பு பெண் ஊழியர்களுக்கு வழங்கவுள்ளது.

இதுகுறித்து FlyMyBiz நிறுவனர் சாமியோ தத்தா கூறுகையில்,

“எங்களது நிறுவனப் பெண் ஊழியர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு வழங்குகிறோம். ஜனவரி 2019 முதல் இத்திட்டம் அமலில் வரும் அரசு விடுமுறைகள், ஊதியத்துடனான விடுமுறைகள் போக கூடுதலாக ஆண்டுக்குப் 12 நாள்கள் பெண்களுக்குக் கூடுதல் விடுப்பு உள்ளது. இதுபோன்ற சமயங்களில், அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டால் மறுநாள் அவர்கள் தங்களின் வேலையைத் திறம்படச் செய்வார்கள் என்று நினைக்கிறேன் ஊழியர்களின் நலன் எப்போதுமே முக்கியம் அவர்களின் திருப்தி நமக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்களாத்தில் இந்த விடுமுறையை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் FlyMyBiz மீடியா நிறுவனம் ஆகும். இத்திட்டத்தை மும்பையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் முன்னதாகவே அமல்படுத்தி உள்ளன. மேலும் நாட்டில் இது மூன்றாவது நிறுவனமாகும். ஏற்கெனவே, இத்தாலி, ஜப்பான், தெற்கு கொரியா ஆகிய நாடுகளில், பெண்கள் மாதவிடாய் காலத்தில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க