• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டு கொண்டாடத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது வழக்கு!

January 1, 2019 தண்டோரா குழு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டை வரவேற்கும் வகையில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னையிலும் நேற்று மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், நேற்று காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி புத்தாண்டு தினத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதுடன் குற்றம் செய்தவரின் தகவல்கள் குற்ற ஆவணக்காப்பகத்தில் பதிவு செய்யப்படும். பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கடுமையான விதிகளை விதித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், மேலும் இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி 3 பேர் பயணித்ததாக 233 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க