December 24, 2018
தண்டோரா குழு
ஆங்கில புத்தாண்டு கொண்டாடத்தின் போது கலச்சரா சீரழிவுகளை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிந்து பாரத் சேனா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம் இதைதொடர்ந்து இனி வரும் 2019க்கான புத்தாண்டை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள். இதில் சமுதாயத்திற்கு சீர்கேடு விளைவிக்கும் வகையில் கிளப் டான்ஸ் ,சாலையில் பைக் ரேஸ், பெண்களை கிண்டல் செய்வது, மதுபானங்கள் நடுசாலையில் அமர்ந்து அருந்துதல் போன்ற சீரழிவுகளை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பண்பாட்டை காக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதில் ஹிந்து பாரத் சேனா தலைவர் பாண்டி செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.