March 22, 2018 தண்டோரா குழு
புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது
புதுச்சேரியில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன்,சங்கர்,செல்வகணபதி ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ.க்களாக உள்துறை அமைச்சகம் நியமனம் செய்தது.இந்நிலையில் இவர்கள் மூன்று பேர் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மி நாராயணன் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டே எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் சாமிநாதன்,சங்கர்,செல்வகணபதி ஆகியோரை நியமித்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும்,உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் வழக்கை சந்திக்கத் தயார் என்று பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன் தெரிவித்துள்ளார்.