• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய தலைமுறை மீதான வழக்கு அரசு அடக்குமுறையை கையாளுகிறது – தங்கதமிழ்ச்செல்வன்

June 12, 2018 தண்டோரா குழு

விவாதம் நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்றும், அதற்கு இதுபோன்ற புதிய தலைமுறை மீதான வழக்கு அரசு அடக்குமுறையை கையாளுவதாகவும்,அரசை கண்டிக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உயர் நீதிமன்றம் சொல்லியும் எஸ்.வி.சேகரை கைது செய்யப்படாததை சுட்டிக்காட்டியவர், ஊடகங்கள் பயத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும்,மத்திய, மாநில அரசு நேர் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும்,தேர்தலின் போது மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார் என்றும்,இது ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா என்று கேள்வி எழுப்பினார்.

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை முக்கியம் இல்லை என்றும்,அதற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தலாம்.காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதே தற்போது முக்கியம்.தஞ்சை டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி., திட்டம்,மணல் கொள்ளை,நியூட்ரினோ திட்டம்,ஊழல் செய்வதை நிறுத்தினால் மக்களுக்கு வேண்டிய திட்டங்கள் கிடைக்கும்.

திவாகரன் தனிக்கட்சி துவங்கியதில் உபயோகம் இல்லை என்றவர்,தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தொடர்பான வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்காமல் நீதிமன்றம் தாமதம் செய்கிறது.மத்திய அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுகிறாதா,எந்த தீர்ப்பானலும் அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க