• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பீர் பாட்டில்களில் வாழ்ந்து வரும் Australian Spotted Hand Fish இனம்

August 9, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் உயிரினமான “Australian Spotted Hand Fish” இன மீன்கள், பீர் பாட்டில்களில் வாழ்ந்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடல் பகுதியில் “Australian Spotted Hand Fish” என்னும் இனத்தை சேர்ந்த மீன்கள் வாழ்ந்து வருகின்றனர். அழிந்து போகும் மீன் இனங்கள் பட்டியலில் இவை சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கள் அழிவிலிருந்து காத்துக்கொள்ள, கடல் படுக்கைகளில் தூக்கி எறியப்படும் பீர் பாட்டில்களில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகிறது.

கடலில் பாய்ந்து செல்லும் கப்பல்கள் மற்றும் வட சீனா, தென் கொரியா, ரஷ்யா மற்றும் ஜப்பான் கடல் பகுதியில் வாழும் நட்சத்திர மீன்கள் ஆஸ்திரேலியா கடல் பகுதியில் துளையிட்டு, “Australian Spotted Hand Fish” இனம் வசிக்கும் இடத்தை அழித்து விடுகிறது.

இதனால், கடல் படுக்கையில் வீசி எறியப்படும் பீர் பாட்டில்கள், தங்கள் இனத்தை பெருக்க சரியான இடம் என்று, அதில் வாழ்ந்து வருகின்றன. நட்சத்திர மீன்கள் பீர் பாட்டில்களை அழிக்க முடியாததால், “Australian Spotted Hand Fish” இன மீன்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அதனால், அந்த மீன்கள் அதில் வாழ்ந்து வருவதை பார்க்கமுடிகிறது.

ஆய்வாளர்கள் அந்த இனத்தை மீட்க, ஆற்றில் செயற்கை வாழ்விடங்களை உண்டாக்கி, அந்த மீன்கள் முட்டையிட, சுமார் 6,000 பிளாஸ்டிக் குச்சிகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு பெண் மீனும் சுமார் 200 முட்டைகளையிடும். அவை பொறித்து வெளியே வரும் வரை தாய் மீன், அவைகளை பாதுகாத்துக்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க