• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீரில் தூசிகள் மிதந்ததால் குடிமகன் அதிர்ச்சி

January 28, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தூசி இருந்ததால் குடிமகன் அதிர்ச்சியடைந்தார்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை மாநகரின் மையப்பகுதியில் உள்ளதால் இங்கு மது விற்பனை மிகவும் ஜோராக நடக்கும். மாநகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோர், கட்டிட தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு மது வாங்கிவிட்டு அருகில் உள்ள பாரில் மது அருந்துவார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் கோவை பெரியகடை வீதி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(38) என்பவர் இக்கடையில் பிரிட்டிஷ் எம்பையர் பீர் வாங்கி உள்ளார். நண்பர்களுடன் அருகில் உள்ள பாருக்கு சென்று அந்த பீர் பாட்டிலை பார்த்த போது அதில் மிகவும் சிறிய அளவிலான தூசிகள் மிதந்து உள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார் ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க