• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

September 17, 2020 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் மருத்துவமனை வளாகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில்,கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் மருத்துவமனை வளாகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

மருத்துவமனையில் உடல் நல பாதுகாப்பு பணியாளர்கள்,நோயாளிகள் ஆகியோரின் பாதுகாப்பு என்ற தலைப்பில் இந்த ஆண்டு உலக நோயாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.நிகழ்ச்சியில் தீயணைப்பு பாதுகாப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்த அரங்கினை தலைமை நோடல் அலுவலர் டாக்டர் முரளி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தீயணைப்பான் கருவிகளை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், பேராசிரியர் ஜெயவர்த்தனா, டி.விஜயா, டாக்டர் ரபி, மருத்துவ இயக்குனர் ராஜ்குமார், நர்சிங் சூப்பரெண்ட் டாக்டர் அனுராதா, டாக்டர் ராமமூர்த்தி, தீயணைப்புப் பிரிவு டாக்டர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உலக நோயாளிகள் பாதுகாப்பு வாரம் ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதில் நோயாளிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பிஎஸ்ஜி மருத்துவமனை டாக்டர்கள் பேசியுள்ளனர்.

மேலும் படிக்க