• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு : ஈரோடு மாவட்டம் முதலிடம்

May 30, 2018 தண்டோரா குழு

தமிழக பள்ளி கல்வி வரலாற்றில் முதல் முறையாக 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, அதனுடைய முடிவுகள் வெளியிடப்பட்டது.

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே இதுவரை பொதுத் தேர்வுகள் நடைபெற்று வந்தது.தமிழக பள்ளி கல்வி வரலாற்றில் முதல் முறையாக 2017-18-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,63,668 மாணவ-மாணவிகள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதில்,தேர்வு எழுதிய சுமார் 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதன்படி 97.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் இரண்டாவது இடத்தையும் கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மாணவர்கள் 87.4% தேர்ச்சியும்,மாணவிகள் – 94.6% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.அதைப்போல் 188 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் 2,054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.இயற்பியல் – 93 %, வேதியல் – 92.7%, உயிரியல் – 92.6%, தாவரவியல் – 89.3%, விலங்கியல் -91.8%, கணிதம் – 92.5%, கணினி அறிவியல் – 95.3% தேர்ச்சி பெறுள்ளனர்.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை தமிழக அரசின் இணையதளங்கள் மூலமாக பார்த்து வருகின்றனர். மேலும்,மறு கூட்டலுக்கும் விடைத்தாள் நகல் பெறவும் ஜூன் 1-4ம் தேதி வரை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க