• Download mobile app
17 Dec 2025, WednesdayEdition - 3598
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பில் தொகை சீனியாரிட்டி படி வழங்க மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தல்

January 12, 2024 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்துள்ள மனுவில் பில் (பட்டியல் ) தொகை முறையாக சீனியாரிட்டி படி வழங்காமல் பாரபட்சமாக ஒரு சிலருக்கு மட்டும் தொகை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை பரிசீலித்த கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சீனியாரிட்டி படி முறையாக பில் தொகை வழங்குவதாக உறுதி அளித்தார். அவருக்கு சங்கத்தின் தலைவர் உதயகுமார் மற்றும் செயலாளர் கேசிபி இன்பரா நிறுவனர் கேசிபி சந்திரபிரகாஷ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்கள் ராபர்ட் ராஜா மற்றும் பி அண்ட் சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பில் தொகை நிலுவை வைக்கப்பட்டுள்ளது.இந்த தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிவற்ற பணிகளுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கிறது இதனையும் தாமதம் இன்றி விரைவாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க