• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இனி ஆன்லைனில் வழங்க வேண்டும்- சுகாதாரத்துறை

July 6, 2018 தண்டோரா குழு

சி.ஆர்.எஸ் மென்பொருள் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இனி ஆன்லைனில் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இங்கு ஆன்லைன் வசதி இருந்தாலும், முறையாக பின்பற்றாததால் தாமதம் ஆகிறது.
இந்நிலையில் இனி ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில்,பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு புதிய Common CRS மென்பொருள் மாநிலந் தழுவிய அளவில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலம் வழங்கப்படும் ஆவணங்கள் சட்டபூர்வமாக செல்லும்.அவற்றை அதிகாரப்பூர்வ சான்றுகளாக கொள்ளலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சம்மந்தப்பட்ட பதிவாளர்கள் மூலம் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். புதிய மென்பொருள் தவிர வேறு மென்பொருள் மூலமோ, மேனுவலாகவோ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க