December 20, 2018
தண்டோரா குழு
உலகில் உள்ள பல உயிரினங்கள் அழிவின் விழும்பில் உள்ளது அப்படி அழிந்து வரும் வன உயிரினங்களை காப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரான்சில் உயிரினங்களை காக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்விளக்குகளைக் கொண்டு பல்வேறு உயிரினங்களின் வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலக வன உயிரின பாதுகாப்பு அமைப்பு பாரிஸ் நகரில் உள்ள தாவரவியல் பூங்காவில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
பூங்காவின் நுழைவு வாயில் ஒரு சுறா மீனின் வாயில் நுழைந்து செல்வது போன்ற வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தவளைகள், ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், பாம்புகள், யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள் என பல்வேறு உயிரினங்களை ஒரு மிருகக்காட்சி சாலையே போன்று வண்ண விளக்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அந்த காலத்தில் வாழ்ந்த டைனோசர்களும் மின்விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.