• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிராங்க் ஷோ வீடியோக்களை எடுக்கவும் வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை!

April 3, 2019 தண்டோரா குழு

பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு படங்களை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது.

டிக் டாக் செயலியை தடைசெய்யகோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயநீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சமூக தீங்கான ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. “டிக் – டாக், தமிழ் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் முன்பாக அரசே தடை விதிக்க வேண்டும். இதனால்,குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் மனநிலை பாதிக்கப்படுகிறது.இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் டிக் – டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் டிக்டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பிராங்க் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே கருதப்படும். இதுபோன்ற ஷோக்களில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தாடைவிதிப்பதாகவும் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க