• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல பவுடர் நிறுவனத்துக்கு ரூ.2400 கோடி நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

August 24, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவிலுள்ள பிரபல தனியார் பவுடரை பயன்படுத்திய பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதால், அவருக்கு நஷ்ட ஈடாக 24௦௦ கோடி தரவேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 63 வயது ஈவாஎச்சல்வேலியா என்பவர் வசித்து வருகிறார். அவர் பல ஆண்டுகளாக தனியார் நிறுவனம் தயாரித்து வரும் பவுடரை பயன்படுத்தி வந்தார். அதனால், தனக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டது. அந்நிறுவனம் தனக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக 417 மில்லியன் டாலர், இந்திய செலவானிபடி 24௦௦ கோடி தரவேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவை கேட்ட அந்த நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. எனவே, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க