• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரியில் காலமானார்

December 21, 2018 தண்டோரா குழு

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் (73) காலமானார்.

புதுச்சேரியில் 1945-ம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன் பத்திரிகைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கினார். சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்ற தனது பெயரை பிரபஞ்சன் என மாற்றிக்கொண்டார்.பிரபஞ்சன் 1995-ம் ஆண்டில் “வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், கடந்த ஓராண்டாக புற்றுநோயால் கடும் அவதியடைந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மாநிலம், மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவே, அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சில நாள்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மீண்டும் பாதிப்படைந்தது. இதனால் , மீண்டும் அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருந்தனர். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

மேலும் படிக்க