April 25, 2019
தண்டோரா குழு
பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரம்மாண்டப் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறங்கும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக இன்று மாலை வாரணாசி வந்தார். இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி, வாரணாசி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 கிமீ தூரம் பிரம்மாண்டப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்காளர்களிடையே வாக்கு சேகரித்தார். இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
பேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும், இப்பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி லோக்சபா தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.