• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பாஜகவினர் பிரம்மாண்ட பேரணி – லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

April 25, 2019 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரம்மாண்டப் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறங்கும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக இன்று மாலை வாரணாசி வந்தார். இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி, வாரணாசி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 கிமீ தூரம் பிரம்மாண்டப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்காளர்களிடையே வாக்கு சேகரித்தார். இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும், இப்பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி லோக்சபா தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க