• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிவி சிந்து !

August 27, 2019 தண்டோரா குழு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

5-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்றது. இதில், கடந்த 24-ம் தேதி
நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து. முதல் முறையாக தங்கம் வென்று நாடு திரும்பிய அவர், பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சர்வதேச அளவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த சிந்துவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பெருமைமிக்க பெண் சிந்து என்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அதன் பின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சிந்து சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்திய அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை சிந்துவிடம் கிரண் ரிஜிஜூ வழங்கினார்.

மேலும் படிக்க