• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமருக்கே துரோகம் செய்ய முயன்றவர் எடப்பாடி பழனிச்சாமி- கோவை செல்வராஜ்

August 22, 2022 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாபா இல்லத்தில் ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

நேற்று முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் அவர்களை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். அம்மாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் முனுசாமி என கூறிய அவர், முனுசாமிக்கு
கட்சியில் 2 ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ் என தெரிவித்தார்.

எடப்பாடியே முனுசாமிக்கு எதிராக பேசிய போது ஆதரவு கொடுத்தவர் ஓ.பி.எஸ் எனவும் தெரிவித்தார். ஓபிஎஸ் அதிமுகவில் உழைக்கவில்லை என்று சொல்கிறார் ஆனால் அம்மா ஓ.பி.எஸ்.சை தான் பாக்கியம் என கூறியதாக தெரிவித்தார். விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை அம்மாவிடம் வாங்கியவர் ஓ.பி.எஸ் என தெரிவித்த அவர்,
அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி யோக்கியதை கிடையாது எனவும் கூறினார்.

வருமான வரி சோதனையின் போது தொண்டர்களை அடியாட்கள் போன்று வீட்டின் முன்பு குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 1000 கோடி செலவு செய்து பதவி வரவில்லை என்று எடப்பாடி, முனுசாமியை வைத்து பேசுகிறார் எனவும் அதிமுகவில்
தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர் எனவும் கூறினார்.இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி என தெரிவித்த அவர்,
கோடநாட்டில் கொலை கொள்ளை நடந்துள்ளது அம்மாவின் வீட்டிற்கு காவல் போடாதவர் எடப்பாடி அம்மாவின் வீட்டை தனியார் வீடு என்றவர் எடப்பாடி என கூறினார்.

எடப்பாடி தலைமையில் கடந்த 4 அரை வருடங்களில் செய்த தவறுகளை பட்டியலிட்டு வெளியிடுவோம் எனவும்நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் எனவும் விரைவில் மற்றவர்கள் மீதான பட்டியலை வெளியிடுவோம் என்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில் மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெறுகிறது.

வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பாதுகப்பாக பார்த்துக் கொண்டவர் ஒ.பி.எஸ் தான். நீதிமன்றம் ஜீலையில் நடத்திய கூட்டம் முறையானது அல்ல என்றுள்ளது. தளவாய் சுந்தரம் கட்சி பைலாவை முதலில் படிக்க வேண்டும்.கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை என தெரிவித்தார்.ஓபிஎஸ் ஒரு முதலமைச்சர் ஆக இருந்து மற்றொருவரை முதலமைச்சராக அறிவித்தவர்.

கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி எனவும் தெரிவித்தார். அம்மாவின் சீட்டுக்கு துரோகம் செய்பவர் எடப்பாடி எனவும் தெரிவித்தார். ஓ பி எஸ் தீர்ப்புக்கு பின் கட்சி அலுவலகத்துக்குள் செல்வார் எனவும் கட்சி தலைவரும் ஓ பி எஸ் தான் பொருளாளரும் அவர் தான் எனவும் தெரிவித்தார்.
சசிகலா கட்சியின் உறுப்பினர் எப்பவும் போல இருப்பார் எனவும் தெரிவித்தார். பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் எடப்பாடி எனவும் கூறினார். கூடிய விரைவில் அவ்விவகாரம் தெரியவரும் எனவும் கூறினார்.கொடி கட்சி சின்னம் அனைத்தும் ஓ பி எஸ் தலைமையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க