• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமரின் தமிழக வருகையால் அரசியல் ரீதியாக எந்த மாற்றமும் வராது – டி. ராஜா !

January 4, 2022 தண்டோரா குழு

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ் கட்சிகள் இணைந்து கூட்டு முயற்சி எடுத்தால் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு வங்கி உயரும் என்று இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கோவை ப்ரூக்பாண்ட் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எங்கள் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் வரும் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. அகில இந்திய மாநாடு இந்தாண்டு அக்டோபர் 14 முதல் 18 ம் தேதி வரை விஜயவாடாவில் நடைபெற உள்ளது.இந்தியாவில் உள்ள அரசியல் சூழல், மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை மதிப்பீடு செய்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூர்க்கத்தனமாக செயல்பட தொடங்கியுள்ளன. இந்தியாவில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையாக இருப்பதால் அதனை நிறைவேற்ற மதம், சாதி, மொழி காலாச்சாரத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகின்றனர். இதனை சாதிக்க பா.ஜ.க.,வை பயன்படுத்துகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்-ன் வழிகாட்டுதலின் பேரில் பா.ஜ.க செயல்படுகிறது.

கோவையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில், தனியார் பள்ளியில் ‘சாகா’ பயிற்சி அளிக்கப்படுகிறது. இது வன்முறையை தூண்டும் பயிற்சியை கொடுக்கிறது.பொதுத்துறை நிறுவனங்களை தகர்த்து வருகிறது மத்திய அரசு. பிரதமர் பின்பற்றும் கொள்கைகள் நமது பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கும் கொள்கையாக உள்ளது.
ஆய்வு முடிவுகளின் படி பசி-பட்டியினியில் உள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் இந்தியா உள்ளது.வங்கிகளை தனியாரிடம் ஒப்படைப்போம் என்றனர், இதனால் வங்கி ஊழியர்களும் போராட்டம் நடத்தினர்.

உழைக்கும் மக்கள் நாட்டின் சுயசார்பை காப்பாற்ற போராடுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ள நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது.பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. பாராளுமன்றம் செயல்படாத அவையாக உள்ளது. இதில் 12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கூட்டாட்சி என்பதன் அரணாக உள்ள அவையே செயல்படாமல் உள்ளது. பாராளுமன்றம் முடக்கப்படுமானால் ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

பிரதமரை வரவேற்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம். ஆனால் பிரதமர் வருகையால் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஏற்கவில்லை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு குறித்து ஏற்கனவே நாங்கள் பேசி உள்ளோம். இந்திய கம்யூ., கட்சிதான் முதலில் வேண்டுகோள் விடுத்தது. கூட்டு முயற்சி எடுத்தால் தமிழகத்தில் வாக்கு வங்கி உயரும்.

மேலும் படிக்க