• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘பிரச்சினையைத் தூண்டிவிட வரவில்லை’ – விஜயகாந்த்

July 22, 2017 தண்டோரா குழு

கதிராமங்கலத்தில் நடைபெறும் மக்கள் போராட்டம் தொடர்பாக பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நான் வரவில்லை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.எண்ணெய் நிறுவன குழாயில் இருந்து விவசாய நிலங்களில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராகப் போராடி வரும் மக்களைச் சந்தித்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது,

“கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசியை எதிர்த்து போராடிய மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் தமிழக அரசு விடுவிக்க நடவடிக்கை வேண்டும். கதிராமங்கலத்துக்கு ஓஎன்ஜிசியைக் கொண்டு வந்ததில் தி.மு.க மற்றும் அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது.

கதிராமங்கலத்தில் நடைபெறும் மக்கள் போராட்டம் தொடர்பாக பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நான் வரவில்லை. மக்களுக்காகப் அவர்களுடன் இணைந்து போராடவே வந்திருக்கிறேன்”.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க