• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரசவத்தின் போது தாய் இறந்ததால் சோகம் – கோவையில் ஆண் குழந்தை ₹7500 க்கு விற்பனை

September 13, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூரில், பிறந்த ஆண் குழந்தை 7500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான அருள்செல்விக்கு திருமணம் ஆகாத நிலையில்,கடந்த ஆறாம் தேதி அன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்தின் போது குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார்.இதையடுத்து, அவரது உடலை அவருடைய அக்கா கணவரான ஆனந்தராஜ் சொந்த ஊரான நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஆனந்தராஜ், பிறந்த குழந்தையை, ராஜன் – செல்வி என்ற தம்பதிக்கு, 7500 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ராஜன் செல்வி தம்பதி,அந்தக் குழந்தையை,அவினாசிப்பாளையத்தைச் சேர்ந்த மணிமேகலை என்ற உறவினரிடம் வளர்க்க கொடுத்துள்ளனர்.இதற்கிடையில்,குழந்தை விற்பனை குறித்து தகவலறிந்த சைல்ட் லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் உமா தேவி,ஆலோசகர் ஜோசப் ரகுமான் கென்னடி உள்ளிட்டோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் குழந்தையை வாங்கிய செல்வியுடன் விசாரணை நடத்தினர்.அருள்செல்வியின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாததால் தான் குழந்தையை விற்றதாக ஆனந்தராஜ் வாக்குமுலம் அளித்துள்ளார்.காவல்துறை விசாரணையில் அருள்செல்வி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குழந்தையின் தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க