• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் மாதிரி வாக்குப்பதிவு

November 12, 2021 தண்டோரா குழு

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.

கோவை மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு மொத்தம் 6618 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

இதில் தற்போது வரை 3332 இயந்திரங்கள் வந்துள்ளது.இதில் 5 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் பெல் நிறுவன பொறியாளர்கள் 10 நபர்கள் பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தினை பரிசோதனை செய்தனர். இந்த மாதிரி வாக்குப்பதிவினை மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சி தேர்தல்) சந்தானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க