• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாவனாவுக்கு நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம்- மஞ்சு அறிவிப்பு

February 24, 2017 தண்டோரா குழு

மலையாள நடிகை பாவனாவுக்கு நேர்ந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நடிகை மஞ்சு வாரியார் அறிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை பாவனா சமீபத்தில் கொச்சியிலிருந்து படப்பிடிப்பு முடிந்து வரும் வழியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவருக்கு ஆதரவாக மலையாளத் திரையுலகமே ஒருங்கிணைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள முன்னணி நடிகையும் பாதிக்கப்பட்ட பாவனாவின் நெருங்கிய தோழியுமான நடிகை மஞ்சு வாரியார் கேரள தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை மஞ்சு வாரியார் கூறாவிட்டாலும் அவரது நட்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

எனினும், தற்போது இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பல்சர் சுனில் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர். இவர்களுக்குப் பின்னால் யாரோ இருக்கின்றனர் என்று பாவனாவுக்கு நெருக்கமானவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

மேலும் படிக்க