• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

May 14, 2019

பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு வின் பண்ணை வீடான சின்னப்பம் பாளையத்தில் ஒரு மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஏற்கனவே சி டி சிஐடி போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது மாணவிகளை சீரழித்து ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டது இந்த வீட்டில் தான் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிஐ வசம் மாற்றபட்டதற்கு பிறகு பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள் குற்றவாளிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மேலும் குற்றவாளிகளின் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெற்றோர்களிடமும் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். அதைப்போல் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள குற்றவாளிகள் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பண்ணை வீட்டில் தற்போது ஆய்வு செய்து வரும் சிபிஐ அதிகாரிகள் அக்கிராமத்தில் உள்ள அக்கம் பக்கம் உள்ள தோட்டங்களிலும் வீடுகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க