• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலக்காடு இளைஞர் போலந்து நாட்டில் கொலை

January 28, 2023 தண்டோரா குழு

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் போலந்து நாட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். பெற்றார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலக்காடு கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப் மற்றும் ரிஷினா பானு. இவர்களது மகன் இப்ராஹிம் ஷெரிப். பத்து மாதங்களுக்கு முன்பு போலண்டு நாட்டிற்கு ஐ. என். ஜி. வங்கியில் பணிபுரிய சென்றுள்ளார். இவர் அந்த நாட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ‘வொர்க் பிரம் ஹோம்’ பணி புரிந்து வந்து உள்ளார். கடந்த 24 ஆம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டில் அவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.

அதன் பின்னர் 26 ஆம் தேதி அவர்களது தாயாருக்கு போலந்து நாட்டில் உள்ள மலையாளம் அசோசியேஷன் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது உடல் 7 நாட்களில் இருந்து பத்து நாட்களுக்குள் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கொண்டுவரப்படும் என அந்த நாட்டு எம்பாசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக போலந்து நாட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் பைனல் ரிப்போர்ட் விரைவில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிப்பார்கள் என போலந்து நாட்டு எம்பசி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க