• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளி மாணவர்களால் குப்பை குவிப்பு – தூய்மையை கற்பிப்பது ஆசிரியர்களின் முக்கியப் பொறுப்பு

August 22, 2024 பா.ஸ்ருதி

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி நடைபெற்று வரும் பள்ளி மண்டல விளையாட்டு போட்டிகள் சமயத்தில், மாணவர்கள் காகிதங்கள், சாக்லேட் மற்றும் பிஸ்கெட் கவர்கள்,பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் பழச்சாறு பாட்டில்களை ஆங் ஆங்கே வீசி, வளாகத்தை அசுத்தம் செய்கிறார்கள் . இதனால் பல்கலைக்கழக தூய்மை பணியாளர்கள் தினமும் சிரமப்பட்டு இக்குப்பைகளை அகற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதை குறித்து பல்கலைக்கழக தூய்மை பணியாளர் கூறுகையில்,

பல்கலைக்கழக புல்வெளி மற்றும் சாலைகளில் மாணவர்கள் வீசும் குப்பைகளை சுத்தம் செய்வதில் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். காலை 8 மணி அளவில் தொடங்கி பல்கலைக்கழக சாலை மற்றும் புல்வெளியை சுத்தம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் ஆகிறது. வெயிலின் தாக்கமும் அதிகம்.

இந்நிலையில்,மாணவர்களுக்கு தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது,அவர்களிடம் தகுந்த நடத்தையை வளர்ப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். எனவே பள்ளி மாணவர்களுடன் வரும் ஆசிரியர்கள் அவர்கள் அசுத்தம் செய்யாத்துவாரு பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.” என்றார்.

தூய்மையை கடைப்பிடிப்பது சிறுவயதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்பதால், ஆசிரியர்கள் மாணவர்களை தூய்மையான வாழ்க்கை முறைக்கு வழிநடத்த வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க