• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

October 9, 2020 தண்டோரா குழு

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து கோவையில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்பு கூட்டமைப்பு சார்பாக பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து நீதிமன்றங்களில் நீதியுடன் தீர்ப்பு வழங்குங்கள் என்ற கோசத்துடன் கருப்புக்கொடி ஏந்தி செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், இயக்கங்கள், இஸ்லாமிய பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை யொட்டி தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தலைமையில் கோவை, திருப்பூர் ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.மேலும் கோவை மாநகர் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க