• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

April 1, 2019 தண்டோரா குழு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மத்திய நேரடி வரி வாரியம் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க, முதலில் 2018 ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின்னர் மார்ச் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய நேரடி வரி வாரியம் இன்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது அதில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் ஆதார் – பார் கார்டு இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க